இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று1868947317


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று


இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த அண்டு  5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant